விடுகதைகள் – Vidukathai in Tamil (06)

விடுகதைகள் – Vidukathai in Tamil (06)

 


விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 24 
1. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? மரம் 

2. “காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்? கொக்கு” 

3. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ? ஊசி 

4. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன? ஈ 

5. “ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்? துடைப்பம்”

6. “கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன? மின்விசிறி” 

7. “நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்? அன்னம்” 

8. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ? தேனீ 

9. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன? எறு‌ம்பு 

10. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன? நெருப்பு

 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 25 

1. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன? உப்பு 

2. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன? சேவல் 

3. “சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன? கிளி” 

4. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன? உரோமம் 

5. “காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்? பாம்பு” 

6. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ? தேன் 

7. “சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன? பப்பாளி விதைகள்” 

8. “காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன? சேவல்” 

9. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன? சங்கு 

10. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன? குடை

 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 26 

1. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்? புல்லாங்குழல் 

2. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? குளிர் 

3. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? மின்விசிறி 

4. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ? வாழைப்பூ 

5. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன? தேன் கூடு 

6. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்? அமைதி

7. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன? தண்ணீர் 

8. “நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்? கைகாட்டி” 

9. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? அன்னாசிப்பழம் 

10. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன? காட்ஸ் 

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 27 

1. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி 

2. “மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? பஞ்சு” 

3. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன? சட்டை

4. “கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன? கரும்பு” 

5. “மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன? ஒட்டகம்” 

6. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ? வானொலிப் பெட்டி 

7. “சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன? கொசு” 

8. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ? காற்று 

9. “கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன? தேங்காய்” 

10. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post