விவேகசிந்தாமணி (பாடலும் பொருளும்)

விவேகசிந்தாமணி (பாடலும் பொருளும்)

                                          விவேகசிந்தாமணி (பாடலும் பொருளும்)


  1. விவேக சிந்தாமணி என்பது ஒரு தொகுப்பு நூல்.
  2. தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை.
  3. பல அரிய கருத்துக்களை, உலகியல் அனுபவப் பாடங்களை பாடல்களாக ஆக்கி கொடுத்திருக்கிறார்கள் புலவர்கள்.
  4. தொகுப்பு நூல் என்பதால் பாடல்களின் வரிசையில் மாறுபாட்டையும் மாறுபட்ட பாடல்களையும் காணமுடிகின்றது.

  1. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பொருளோடு காண்போம்.












ஆலமரத்தில் இலை, பூ, காய், இனிமையான பழம் இருந்தால் மிகுதியாக பறவைகள் இது தமது இருப்பிடம் என கூடிவாழும். இலை முதலானவை நீங்கி மரம் பட்டு நின்றால் ஒரு பறவையும் அங்கு இராது. அதுபோல செல்வமானது மிகுந்திருந்தால் பலர் வந்து வந்தனம் செய்து உறவுகள் என கூடி இருப்பார். செல்வம் இல்லை என்றால் ஒருவரும் எட்டியும் பார்க்க மாட்டார்.







ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று, தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின் கூட்டை பிய்த்தெறிந்தது. கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக்கும். 



















தன்னை அடைந்தவர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏழைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும், தானம் செய்ததால் வறுமை அடைந்தவர் பூமியில் யார் உள்ளார்? யாருக்கும் எதையும் கொடாது புகழடைந்தவர் யாரும் உலகில் உண்டோ? அனைவருக்கும் பயன்படும் ஊருக்கு நடுவே இருக்கும் நீர் நிலையும், யாருக்கும் பயன்படாமல் கானகத்தே இருக்கும் நீர்நிலையும் கோடையில் வற்றி மீண்டும் அடுத்த மழைக்காலத்தில் நீர் நிரம்பிப் பெருகும் தானே!



ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.




பொன்னும் மணியும் நிறைந்த செல்வம் இருந்தால் கீழானவரையும் உறவினன் என்று சொல்லி புகழ்ந்து கொண்டாடி அவன் வீட்டில் திருமணமும் செய்து செய்துகொள்வார்கள். அதேசமயம் மன்னரைப் போல் வாழ்ந்து பின்னர் செல்வம் இழந்து யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய சக்தி அற்றவராக ஒருவர் ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளமாட்டார், இகழ்ந்தும் பேசுவார்.



கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள்.
















உழைத்துச் சேர்த்த பொருளை தனக்காக மட்டும் பயன்படுத்தினால் தனது உடல் பலமாகும், தவறான ஒழுக்கமுடைய பெண்களுக்குக் கொடுத்தால் உடலில் நோய் வந்து சேரும்; நெருங்கிய உறவுகளுக்கு பயன்படுத்தினால் பற்று மிகுந்து மனமானது மயங்கி துன்பத்தில் வாடும். ஏழைக்கும் தெய்வப்பணிக்கும் கொடுத்தால்  (அது புண்ணியமாக மாறி) ஜீவனுக்குத் துணையாக நின்று இன்பத்தைக் கொடுக்கும்.
















உண்மையைப் பேசுபவர்களுக்கு நன்மை உண்டாகும். உலகம் அவர்கள் வசப்படும் மனிதர்களுக்குள் உயர்ந்தவராகி தெய்வீக குணங்கள் பொருந்தியவர் ஆவார். மாறாக, பொய்மை பேசினால் உணவு கிடைப்பதும் கடினமாகும். நொய்யரிசி கொதிதாளாது குழைந்துவிடுவது போல, இவர்களிடம் பெருந்தன்மையைக் காணமுடியாது என்று அறிவுடையவர்களும் இவர்களைக் கவனியார்.




தீய குணம் உடையவருக்கு கல்வி அறிவு வந்தால் கர்வம் உண்டாகும். அதனோடு பொருளும் சேர்ந்தால் உண்மையைத் திரித்து சொல்லக்கூடாததையும் சொல்ல வைக்கும். சொல்லாற்றலால் தவறாக வாதம் செய்து பிறரது வாழ்க்கையையும் கெடுக்கத் துணிவார். மாறாக, நல்லவர்களுக்கு மேற்கண்ட மூன்றும் கிடைக்குமாயின் (கல்வி,செல்வம்,சொல்திறன்)




அறநெறியில் ஆட்சிசெய்யும் நற்குணமுள்ள அரசனை (அரசனின் ராஜ்ஜியத்தில்) விரும்பிப் பணிவிடை செய்து வாழ்தல் ஒன்று,  கற்புடைய - நற்பண்புகளுள்ள - மனைவியோடு மனமொன்றி சேர்ந்து வாழ்தல் ஒன்று, ஒத்த சிந்தனை உடையவர்களோடு நல்ல மெய்ஞான நூல்களை சேர்ந்து வாசித்தல் ( வாசித்து ஞானம் பெறுதல்) ஒன்று என இம்மூன்றும் இப்பூவுலகின் சொர்க்கங்கள் ஆகும்.














ஒருவனுக்கு அன்பு இல்லாவிட்டால் தாயும் பகையாக இருப்பாள், கடனாளியானால் தந்தையும் பகையாக இருப்பார், நல்ல மதியினை இழந்தால் மனைவியும் பேய் போன்ற பகையாக ஆகிவிடுவாள், அறிவுநூல்களை ஒருவன் கற்காவிட்டால் அவனுடைய வாயே (பேச்சே) அவனுக்குப் பகையாக இருக்கும், நல்வழியில் செல்லாத அச்சிற்றறிவுள்ளவனுக்குப் புதல்வனும் பகையாக இருப்பான்.



தன்னிலையிலிருந்து ஒருவன் (செல்வத்திலோ ஒழுக்கத்திலோ  அதிகாரத்திலோ) தவறிவிட்டால் பூமியில் உறவுகள் இல்லாமல் போய்விடும். (நீரிலிருக்கும்போது உறவாக இருக்கும்) சூரியன் நீரை விட்டு அகன்றபோது தாமரைக்கு எமனாக ஆகிவிடுகிறது. வனத்தைப் பற்றியெரியும்போது தீக்கு உறவாக இருக்கும் காற்று, மெலிந்து விளக்கில் எரியும் போது அணைக்கும் பகையாக ஆகிவிடுகிறது.








யானையை வேட்டையாடிய வேடனை, பாம்பு கடிக்க, பாம்பைக் கொன்று வேடன் இறந்தான். அங்கு வந்த நரி ஒன்று இந்த யானை ஆறுமாதங்களுக்கு உணவாகும், வேடன் மூன்று நாட்களுக்கு உணவாவான், பாம்பு ஒருநாளுக்கு உணவாகும், இப்பொழுது நாம் இந்த வில்லிலுள்ள நரம்பைத் தின்போம் என்று கடிக்க, நரம்பு அறுபட்டு நிமிர்ந்த வில்லானது தலையில் அடிக்க நரி இறந்து போனது. (இப்படியே வாழ்வில் அற்புதங்கள் பல இருக்க, அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தால், எதையும்  அனுபவிக்காமலே) நாளை நாம் நரிபட்டபாடு படவே போகிறோம்.



சான்றோர்கள் உயர்வாகக் கருதிய நூல்களைக் கற்காதவன் மூடன். யாரிடம், எங்கே, எப்படி, எவ்வளவு பேசவேண்டும் என்பதை அறியாமல் பேசுபவன் குற்றவாளி, எந்த வேலையும் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் மூதேவி. யாருக்கும் பயன்படாதவன் சோம்பேறி. பெரியவர்களை வணங்கி ஆசி பெறாதவன் பேய். வேலையைச் செய்யாமல் அதற்கு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பவன் பொய்யன். பசித்தவனுக்குக் கொடாமல் தானே உண்பவன் பாவி.















மக்கள் செய்யும் பாவம் மன்னவரை சாரும் (மக்கள் தர்மமாக வாழ்தலை நிலைநாட்டாதாதலால்), மன்னன் செய்யும் பாவம் மந்திரியை சாரும் (மன்னனை சரியாக வழிநடத்தாதலால்), சீடர்கள் (மாணவர்கள்) செய்யும் பாபம் குருவை (ஆசிரியரைச்) சாரும் ( அறத்தின் வலிமையை மாணவர்களுக்கு  சரியாக உணர்ந்தாததால்), மனைவி செய்யும் பாபம் கணவனையே சாரும் (மனைவியை சரியாகக் கவனிக்கவில்லை என்பதால்). 



நட்பில் வஞ்சனை செய்தவர்களும், பிறர் மனைவியை விரும்பிச் சேர்ந்தவர்களும், கற்புடை  மனைவியோடு சேர்ந்து வாழாமல் விலக்கினோரும், விருந்தினரை வரவேற்று உபசரிக்காமல் விலகியவரும் அல்லது யுத்த களத்தில் அஞ்சி பின்வாங்கிய கோழையும், நீண்ட ஆயுளோடு இந்த பூமியில் வாழ்ந்து குட்டநோய் பிடித்து நரகத்தில் வீழ்வர்.



சிலர் பொருளை (பணத்தை) மிக  விரும்புவார்கள். காமத்திற்கு செலவழித்து மூழ்கிப் புரள்வர், புகழையும் புண்ணியத்தையும் தரும் அறச்செயல்களைச் செய்ய கனவிலும் விரும்பமாட்டார், அறிவில்லாத இவர்கள் குரு, கடவுள், அந்தணர், ஏழைப் புலவர் இவர்களுக்கு கொடுக்க நினைக்க மாட்டார், செருப்பாலே அடித்து மிரட்டிப் பறிக்கும் தீயவர்களுக்கு பணிந்து கொடுப்பார்.



மலைபோன்ற செல்வதோடு நவமணிகளை கொடுத்து திருமணம் செய்துவைத்தாலும், விருப்பம் இல்லாத கணவனை அடைந்த ஒரு பெண்ணின் இல்வாழ்க்கை வீணதாகும். நறுமணம் மிகுந்த சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களை உடலில் பூசிக் கொண்டு இருந்தாலும் கர்வம் நிறைந்த அற்பப் புத்தியுடையவன் நட்பு - சிறுமை உடையதாக வெளியில் சொல்லவும் முடியாததாக - பயனற்றதாக இருக்கும்.








புலிக்கு பயந்து மரத்தில் ஏறிய வேடன் ஒருவனை அங்கு இருந்த குரங்கு ஒன்று இடம் கொடுத்து, உணவும் கொடுத்து, அவனைப் பாதுகாத்தது. ஆனால் புலியானது அங்கிருந்து செல்லாமல் அங்கேயே இருக்க, இரை கிடைத்தால்தான் செல்லும் என்று குரங்கைக் கொன்று புலிக்கு இரையாக்கினான். நல்லவர்களுக்கு உதவி செய்தால் நன்மையே உண்டாகும். தீயவர்களுக்கு உதவி செய்தால் (அவர்கள் சுயநலத்திற்காக) நம் உயிரைப் போக்கும் தீமையையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.



தன் பெருமைகளை தானே புகழ்ந்து பேசுபவரும், தன் குலமே மிக உயர்ந்தது என்று சொல்லி திரிபவரும், பொருளைத் தேடி அறத்திற்குப் பயன்படுத்தாமல் சேர்த்துவைப்பவரும், அழகிய குணமுள்ள மனைவி இருக்க விலை மகளிரை உடலின்பத்திற்காகச் சேருவோரும், தாய், தந்தை, அறிஞர் ஆகியோரை பகையாகப் பார்ப்போரும், அறம் அறியா கீழ்மக்கள் ஆவர்.





















தாங்கிக்கொள்ள இயலாத அளவிற்கு ஒருவனுக்கு வறுமை வந்தால் அறிஞர் சபைதனிலே செல்வதற்கு நாணம் உண்டாகும். வேங்கை போன்று இருந்த வீரம் குன்றி விருந்தினரை எதிர்கொள்ளவும் (எப்படி உபசரிப்பது என்று) நாணம் உண்டாகும், மனைவியின் முகத்தை பார்ப்பதற்கும் (என்ன சொல்வாளோ என்று) அச்சம் வரும், பொய் சாட்சி சொல்லவும் மனம் ஒப்பும், உயர்ந்த அறிவும் குன்றிப் போக சமூகமும் அவனை பழித்துப் பேசும்.












வில் வளைந்து இருக்கின்றது என்றும், யானையும் புலியும் உறங்கிக் கொண்டிருக்கின்றது என்றும், வளர்த்த ஆடு பின் செல்கின்றது என்றும், தீயவர்களின் சொல்லுக்கு அஞ்சி பெரியவர்கள் பொறுமை காக்கின்றனர் என்றும் (ஆகவே ஆபத்து இல்லை) நல்லது என்று தவறாக நினைக்க வேண்டாம், இவை தீமையே விளைவிக்கும் என்று எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.







ஒரு குடும்பத்தில் நல்ல குணமுடைய ஒருவன் தோன்றினால் அவனுடைய குடும்பமும் குலமும் நாடும் நல்ல பெருமையோடு வாழும். தான் இருக்கின்ற நிலம் முழுவதும் வாசனையை பரப்புகின்ற சந்தன மரத்திற்கு ஒப்பாவான் அவன். நன்மையைத் தராத தீயகுணங்கள் உடைய ஒருவன் தோன்றினால் அவன் குடும்பமும் குலமும் தேசமும்  கெடுதலையடையும். அது தன் மரஇனத்தையே அழிக்கும் கோடாரியின் கைப்பிடிக்குச் சமானமாகும்.



அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?



தாய்மையினால் தளர்ச்சி ஏற்பட்டு பெண்களுக்கு இளமை அழகு குறையும்; சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடக்காத அரசனால் உலகம் அழிந்து போகும்; கெட்ட புத்தியுடைய மந்திரியால் நாடு சிறுமை அடையும்; பெரியோர்களின் சொல்கேளாத  பிள்ளைகளால் குலத்திற்கு இழுக்கு ஏற்படும்; கீழான குணமுடையவர்கள் நல்ல உபதேசங்களை கேட்கமாட்டார்; அவர்களுக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீமையையே விரும்பிச் செய்வார்; கீழானவர்களோடு சேர்ந்தால் நல்லவர்களுடைய பெருமை குறையும்; உயர்ந்த தவம் சினத்தால் அழிந்து போகும்.







அப்படி மனிதர்களாய் பிறந்தவர்கள் வேத நூல்களைப் பயின்று அதன்படி வாழ்ந்து இறையருளும் புகழும் பெறவேண்டும். புண்ணிய தலங்களுக்கு பக்தியோடு சென்று வழிபட்டு, எங்கும் நீதி தவறாமல் எடுத்துப்பேசி, நல்லவர்களை நேசித்து வாழ வேண்டும். பத்து மைல் தூரமாவது தன் புகழ் பரவி இருக்குமாறு வாழாதவர் கழுதையென்று என்று உலகில் உள்ளோர் கருதுவார்.




மாலைகளை அணிந்த அழகிய மார்புடைய அயோத்தியின் அரசே (ராமா), பசுமையாக மரம் இருக்க அதில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்தது ஏன் அண்ணா? (என்று தம்பிகள் கேட்க), இவர் நமக்கு வேண்டியவர், இவர் வேண்டாதவர் என்று வரம்பு வைத்து வழக்கை விசாரித்து ஒருதலைப்பட்சமாக தீர்ப்புச் சொன்ன நீதியரசர்கள் வாழ்க்கையைப் போல உதிர்ந்து கிடக்கின்றன தம்பிகளே! (என்று ராமர் பதில் சொன்னார்.)








இறைவன் வாழும் திருத்தலங்களை - திருக்கோயில்களை - மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.






ஒழுக்கம் உடையவராக ஒருவர் வாழ்ந்தால் உலகில் நல்ல அறிவோடு புகழும் உண்டாகும். அவரது ஒழுக்கத்தினால் மற்றவர்களுக்கு நன்மையும் ஏற்படுகின்ற பொழுது அவர் உலகில் தெய்வத்தைப் போல் மதிக்கத்தக்கவராவார். நன்னடத்தையின்றி ஒருவன் வாழ்ந்தால், அறிவொடு புகழும் அழிந்துபோய், அவனது பேச்சும் மதிப்பில்லாததாகி, நோயோடு வாழ்ந்து, நரகத்தில் வீழ்வான்.







மயில் (அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் - உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை - கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும்  ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post