விடுகதைகள் – Vidukathai in Tamil (04)

விடுகதைகள் – Vidukathai in Tamil (04)



 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 15

 1. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? தலையணை

 2. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? நண்டு 

3. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன? இதயம் 

4. நான் இருந்ததில்லைஆனாலும் இருப்பவனாக இருப்பேன். என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன். என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்? நாளை 

5. கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன? முதுகு.

6. கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன? சோற்றுப்பானை-சோறு. 

7. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன? தீக்குச்சி

 8. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன? வெண்டைக்காய் 

9. அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி

 10. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? நத்தை

 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 16 

1. அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன? அப்பளம் 

2. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? பனம்பழம் 

3. முயல் புகாத காடு எது? முக்காடு 

4. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? இளநீர் 

5. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்? பென்சில் 

6. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன? சவப்பெட்டி

7. மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? காளான் 

8. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன? தற்கொலை 

9. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? செல்போன்

 10. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்? கண், மூக்கு. 

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 17 

1. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்? சிலந்தி 

2. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? முதுகு 

3. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? பூட்டும் திறப்பும் 

4. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? மாதுளம்பழம் 

5. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு. 

6. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? இரகசியம் 

7. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? மணிக்கூடு 

8. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல் 

9. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில் 

10. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை

 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 18 

1. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன? கல்வி 

2. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன? இடியாப்பம் 

3. “தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன? கப்பல்கள்” 

4. “தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன? எழுமிச்சம்பழம்” 

5. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? கடிகாரம் 

6. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன? நெருப்பு 

7. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன? தீக்குச்சி 

8. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன? வேம்பு 

9. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன? மெழுகுவர்த்தி

 10. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன? புடலங்காய்

 விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 19 

1. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன? அன்னாசிப்பழம் 

2. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன? மூச்சு 

3. “சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன? வாழைப்பழம்”

 4. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? வளையல் 

5. “வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன? விமானம்” 

6. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? கடிதம் 

7. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்? எறும்பு 

8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்? தென்றல் 

9. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? வியர்வை 

10. “காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன? முட்டை”

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post